சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Date:

கம்பஹா மாவட்டத்தின் மஹேன பகுதியில் உள்ள பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, T56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு உரிய மெகசின் ஒன்றும், இயங்கக்கூடிய 23 இரவைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (26) காலை மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த ஆயுதங்கள் எந்தக் குழுவுக்குச் சொந்தமானது? என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது? போன்ற விடயங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்