நாட்டின் சில பாகங்களில் வெப்பநிலை ஆபத்தான அளவில் உயருமென வளமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலன்னருவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்ப குறியீட்டு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மனித உடலில் வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆலோசனை கூறுகிறது.
வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்கவும், அதிக நீரை பருகவும், வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடையை அணியவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1