164 நாட்களின் பின்னர் இலங்கையில் 150 இற்கும் குறைவான தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று  139 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 164 நாட்களின் பின்னர் நாட்டில் முதல் முறையாக 150 க்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்றாளர்கள. பதிவாகியுள்ளனர்.

நேற்று 139 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். பேலியகொட கொத்தணியில் 118 பேரும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து 7 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 14 நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, மொத்த நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,442 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி 150 க்கும் குறைவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகினர். இரண்டாவது அலையின் தொடக்க சமயமான அப்போது, 121 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த 176 பேர் நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,090 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 2,749 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், வைரஸ் தொற்று சந்தேகத்தில் 472 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்