சித்திரவதை கொடுமை: படுக்கையில் வைத்தே கணவனை கொன்றுவிட்டு பொலிசாருக்கு போன் பண்ணிய மனைவி!

Date:

தினமும் சித்திரவதை செய்த கணவனை நித்திரையில் வைத்தே கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுவில, ராஜவத்தை பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது.

நேற்று (28) அதிகாலை 2 மணியளவில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனின் கழுத்தை, துணியால் நெரித்து கொலை செய்துள்ளார். கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஜானக சம்பத் ஜெயரத்ன (42) என்பவரே கொல்லப்பட்டார். அவரது மனைவி டி.அனுஷா தில்ஹானி (38 ) கொஸ்வத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கணவனை கொலை செய்த பின்னர் 119 அவசர இலக்கத்தை அழைத்த மனைவி தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர்களின் 6, 4, 2 வயதான பிள்ளைகள் பொலிசாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்