ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

Date:

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் இன்று (28) பகல் 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அக்களஞ்சியசாலை முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகி உள்ளன.

தீப்பரவல் ஊழியர்களால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக தீ கட்டுப்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்