எகிப்தில் ரயில் விபத்து: 33 பேர் பலி!

Date:

எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 33 பயணிகள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.

எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 33 பயணிகள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹலா சயீத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே தடங்கள் மோசமாக இருந்த காரணத்தால் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான குடும்பத்திற்கு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி இரங்கலை தெரிவித்ததுடன்,
நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் ரயில்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான ஒன்று. எகிப்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் 300 பேர் பலியாகினர். 2017ஆம் ஆண்டில் மட்டும் எகிப்தில் 1,793 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்