இலங்கைக்குள்ளான விவகாரங்களை முதன்முதலில் சர்வதேச சமூகத்தின் முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவாலேயே கொண்டு செல்லப்பட்டது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர், லக்ஷ்மன் கிரியெல்ல, 1989 ல் காணாமல்போனோர் பட்டியலை உலகளாவிய சமூகத்திடம் சமர்ப்பித்து, இலங்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அறிமுகப்படுத்தியது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தான் என்றும், உள் விஷயங்களை எடுத்துக்கொள்வதற்கும் அவரே பொறுப்பு என்றும் கூறினார்.
மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை பதினேழரை பக்கங்களை கொண்டது. அதில் வெறும் இரண்டரை பக்கங்களை மட்டுமே புலிகளுடனான மோதல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. எஞ்சிய 15 பக்கங்கள் கோட்டாபய ஜனாதிபதியானதக் பின்னர் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் நாட்டில் சிறுபான்மையினர் மீதான அநீதிகள் குறித்தே பேசப்பட்டுள்ளது என்றார்.




