இன்று முதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்ய மூன்று நாள் நடவடிக்கையை தொடங்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறுகையில், தினமும் ஒன்பது முதல் பத்து இறப்புகள் பதிவாகின்றன, அதே நேரத்தில் 30 முதல் 40 நபர்கள் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் மற்றும் தரமற்ற வாகனங்களின் பயன்பாடு காரணமாக காயங்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே அதிகாரிகள் இன்று முதல் வாகனங்களின் டயர்களை ஆய்வு செய்வார்கள் என்று அவர் கூறினார்.
தரமற்ற டயர்களுடன் வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ .3,500 அபராதம் விதிக்கப்படலாம் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹானா குறிப்பிட்டார்.
தகுதியற்ற வாகனங்களை செலுத்தி, காயங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மேலும் ரூ .25,000 அபராதம் விதிக்கப்படலாம் என்றார்.