கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றி இந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (09) ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு முனைய அபிவிருத்திக்காக அதானி நிறுவனத்தின் பெயரை இந்தியா பரிந்துரைத்திருந்ததன் அடிப்படையில், இந்தியாவின் தலையீடு இன்றி அந்த நிறுவனத்துடன் பேசி மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.




