எத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே இருப்பது?; கொரோனா மரணங்களால் அழுது கொண்டிருக்காதீர்கள்: பிரேசில் ஜனாதிபதி!

Date:

கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளைப் பார்த்து அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பிரேசில் மக்களிற்கு, அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா அறிவுரை கூறியுள்ளார்.

பிரேசிலில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 74, 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, 1,786 பேர் பலியாகினர். கொரோனாவினால் பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா, இதற்கு பதிலளித்துள்ளார்.

ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, “ நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள். எவ்வளவு நாள் வீட்டிலேயே இருப்பீர்கள். இதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மரணத்துக்கு வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம்” என்றார்.

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்