சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்!

Date:

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப், இமோ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் பலர் பாதிக்கப்பட்டதாக அண்மை நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களும் தொடர்புபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகவர்கள் உரிமம் பெற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான முறையான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அல்லது தகவல்களை இடுகையிடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்