சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்!

Date:

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப், இமோ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் பலர் பாதிக்கப்பட்டதாக அண்மை நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களும் தொடர்புபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகவர்கள் உரிமம் பெற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான முறையான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அல்லது தகவல்களை இடுகையிடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்