25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்!

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் விளம்பரங்களில் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப், இமோ போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரங்களினால் பலர் பாதிக்கப்பட்டதாக அண்மை நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களும் தொடர்புபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகவர்கள் உரிமம் பெற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான முறையான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் அல்லது தகவல்களை இடுகையிடுவது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

Leave a Comment