[embedyt] https://www.youtube.com/watch?v=ylda4B6U8rM[/embedyt]
நாளைய தினம் (17) அரசாங்கத்தினால் இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பான எந்த ஒரு நிலையான தீர்மானத்தையும் அரசாங்கம் எட்டாது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க இருப்பதற்கு வேலையில்லா பட்டதாரிகள் கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் தொடர்ச்சியாக பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களினால் வெளியாகும் நிலையிலும் அவர்களுக்கான உரிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் அல்லது அரச வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறைகள் எதுவும் ஒழுங்கான முறையில் கட்டி அமைக்கப்படாமையினால் தொடர்ச்சியாக வேலையில்லா பட்டதாரி எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், இதன் காரணமாக உயர் படிப்பு தொடர்பான பிழையான அபிப்ராயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில், தங்களுக்கு நிலையான தீர்மானம் ஒன்று வேண்டுமெனவும், அனைத்து வேலையில்லா பட்டதாரிகளும் வேலை வாய்ப்புகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.




