மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

Date:

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், மூதூர் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்கு பகுதியின் சாலையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச் சேனை, சம்புக்களி, சேனையூர், சம்பூர் உள்ளிட்ட இடங்களிலும், மூதூர் தெற்கு பகுதியின் ஜின்னா நகர், பெரியபாலம் மற்றும் ஜாயா நகர் போன்ற பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.

இந்த நிலைமையை சமாளிக்கவும், வெள்ளநீரை வடிந்து ஓடச் செய்யவும் மூதூர் பிரதேச சபையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சபை செயலாளர் நேரடியாக களத்திற்குச் சென்று இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இரு நாட்களாக தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன.

இந்த நடவடிக்கைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை சீரமைக்கவும், அடுத்தடுத்த கனமழை காரணமாக மேலும் சிக்கல்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்