பாடசாலைகள் எப்போது மீள திறக்கும்?: கல்வியமைச்சர் தகவல்!

Date:

நாட்டில் பொருத்தமான சூழல் ஏற்பட்டவுடன் பாடசாலைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியில் இன்று சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடினதாக அமைச்சர் பீரிஸ் கூறினார்.

ஊடகங்களுடன் பேசிய அமைச்சர், வகுப்பு அறை அடிப்படையிலான கல்விக்கு மாற்று வழி இல்லாததால் பாடசாலைகளை மீண்டும் திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.

இருப்பினும் மீண்டும் பாடசாலைகளை திறப்பது ஒரு முறையான திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும், அதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டுமென அவர் கூறினார்.

கல்வித்துறைக்குள் உள்ள அனைத்து அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 249,613 தடுப்பூசிகள் தேவை என்று கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு 29,407 கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பாடசாலைகளை திறப்பதென்றால், மொத்தம் 279,020  கோவிட் -19 தடுப்பூசி தேவை என்று கூறினார்.

நிர்வாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது அவர்களை பாடசாலைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கும் என்றும், ஒன்லைன் அடிப்படையிலான முறையைத் தொடர்வதற்குப் பதிலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பறைகளுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

மாணவர்களின் போக்குவரத்து  வழிகள் குறித்தும் விவாதங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மாலை 5 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7 மணிக்கு...

அவுஸ்திரேலிய கடன் பண மோசடி: பொலிஸ் விசாரணை கோரி முறைப்பாடு!

இலங்கை திறைசேரியாவால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தவறாகப்...

வெளிநாட்டு கடனை இணைய மோசடியாளர்கள் திருடிய சம்பவம்: அவுஸ்திரேலியா உறுதி செய்தது!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து தூதரகமும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்