தற்காப்பு கலை கற்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு!

Date:

தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வந்த புகாரை அடுத்து பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர் புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னையில் கெபிராஜ் என்பவர் நடத்தி வந்த தற்காப்பு பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் போது பயிற்சியாளர் கெபிராஜ் காரில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஒத்துழைப்பு தராததால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மாலை 5 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7 மணிக்கு...

அவுஸ்திரேலிய கடன் பண மோசடி: பொலிஸ் விசாரணை கோரி முறைப்பாடு!

இலங்கை திறைசேரியாவால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தவறாகப்...

வெளிநாட்டு கடனை இணைய மோசடியாளர்கள் திருடிய சம்பவம்: அவுஸ்திரேலியா உறுதி செய்தது!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகைகளில் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து தூதரகமும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்