நீர்வீழ்ச்சியில் போட்டோ ஷூட் நடத்திய போது சுழலில் சிக்கி 3 இளைஞர்கள் பலி!

Date:

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தீகலவலசை நீர்வீழ்ச்சியில் போட்டோஷூட் நடத்திய இளைஞர்கள் மூன்று பேர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடேரு கிராமத்தை சேர்ந்த நிரஞ்சன்,வினோத்குமார், நாகேந்திர குமார் ஆகியோர் தீகலவலசை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழ்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தி கொண்டனர்.

தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்திய போது இளைஞர்கள் மூன்று பேரும் அங்குள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். மூன்று பேரின் ஆடைகளும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதை பார்த்த கிராமத்தினர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் தேடி வருகின்றனர். போட்டோஷூட் நடத்தும் போது நீரில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்