தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீடு இராணுவப் புலனாய்வாளர்கள், பொலிஸ் புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பிற்குட்பட்டுள்ளது.
இன்று மாலை தனது வீட்டின் முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் தொடக்க நாளில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, அவரது வீட்டின் முன்பாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




