திருப்பதி அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்!

Date:

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பல நோயாளிகளின் உடல்நிலை மோசம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்