யாழ்ப்பாணத்திலிருந்து சென்று 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது!

Date:

தமிழகத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இலங்கை முகாமை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவரது குடும்பம் யாழ்ப்பாணம் குருநகரிலிருந்து பல வருடங்களின் முன் படகு மூலம் இந்தியாவிற்கு அகதியாக சென்றனர்.

இவர் 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். அச்சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாது காப்பு நல அலுவலர் சதீஷ்குமார், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்துள்ளனர்.

மேலும் சூர்யா மனைவியான 15 வயது சிறுமி அவரிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்