UPDATE: கரவெட்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்; நடந்தது என்ன? (PHOTOS)

Date:

கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. இளைஞனின் சடலமென தமிழ்பக்கம் ஆரம்ப தகவலை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அது முதியவர் ஒருவரின் சடலமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே தீயில் எரிந்து மரணமாகியுள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வரும் அவர் மாற்றுத்திறனாளியான முதியவரே சடலமாக மீட்கப்பட்டார்

நேற்று (27) இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, இரவு 9 மணியளவில் கடைக்கு முன்பகுதியிலேயே படுத்துள்ளார். மனைவி, பிள்ளைகள் அருகிலேயே உள்ள வீட்டில் படுத்துள்ளனர்.

இரவு 9.45 மணியளவில் “ஐயோ அம்மா“ என அலறல் சத்தம் கேட்டு, முகன் வெளியே ஓடி வந்துள்ளார்.

அப்போது, கடைக்கு அருகிலுள்ள பனையொன்றின் கீழே தந்தை தீயில் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்தார். உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சிக்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை. அவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

-பருத்தித்துறை செய்தியாளர்-

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்