தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: துரைரெட்ணம்

Date:

ஜனநாயக ரீதியாக செயற்பட்ட அமைப்புக்களை தடை செய்தமை குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவர் இரா.துரைரெட்ணம் வலிறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்கள் தமிழர்களாக இருந்தால், அவ்வமைப்புக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள், இன முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது. ஆகவே அவை தொடர்பாகவும் ஜனாதிபதி பரிசீலனை செய்ய வேண்டும்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மணல் அகழ்வுக்கு, அனுமதி வழங்குகின்ற நிர்வாக முறைகள் பரிசீலனை செய்யப்பட்டால் மாத்திரமே சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்