பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

Date:

காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீரில் சர்வதேச கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

எல்லையில் அத்துமீறுபவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தன்மையை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை அனுப்புகிறது கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் பாகிஸ்தான் காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது”  எனத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்