யாழில் கொரோனா தொற்றினால் மூதாட்டி பலி!

Date:

வடமாகாணத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (2) வடக்கை சேர்ந்த  470 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. அதில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்- நல்லூர் வீதியில்- உயிரிழந்த 84 வயதான மூதாட்டியெருவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

யாழ்ப்பாணத்தில் பதிவான 7வது கொரொனா மரணம் இதுவாகும்.

அதுதவிர,சாவகச்சேரி பொதுச்சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்றான சோதனையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த ஒருவரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்