ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியிலுள்ள தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
இதுவரை ஐக்கிய தேசியக்கட்சியில் செயற்பட்டு வந்த நகரசபை தலைவர் அசோக சேபால மற்றும் நகரைசபை உறுப்பினர்களான இஷார அனுருத்த மஞ்சநாயக்க, தா.சுதாகர், ந.பாலமுரளி, பி.எம் காசிம் மற்றும் சி. சிவராஜ் ஆகியோர் இணைந்தனர்.



