பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நடத்துனர், நேற்று முன்தினம் (13) மொனராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
26 வயதான அப்பெண் நின்றுகொண்டிருந்தபோது தொட்டுத் துன்புறுத்தப்பட்டார். வீட்டிற்குச் சென்ற அவர், இந்தச் சம்பவம் குறித்துத் தன் கணவரிடம் தெரிவித்தார்.
பின்னர், மொனராகல மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மொனராகல மருத்துவமனை பொலிஸாரிடம் இந்த சம்பவம் குறித்துத் தகவல் அளித்தார்.
நடவடிக்கை எடுத்த மொனராகல பொலிஸார், சந்தேக நபரை கைது செய்தனர்.



