29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்கதினம்!

இராயப்பு யோசெப் ஆண்டகை  தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021) தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

அந்த அழைப்பில்-.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப்ஆண்டகை அவர்கள் 01/04/2021 இல்இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

ஆயர் அவர்களின்இழப்பானது தமிழர் தேசத்திற்குஅளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்ததலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்துதேசியத்தின் பால் ஓங்கிஒலித்த குரலை தமிழர்தேசம் இன்று இழந்துநிற்கின்றது .

2009 ம் ஆண்டுயுத்தம் மெளனிக்கபட்ட பின்தமிழர் தேசம் திக்கற்றவர்களாகநின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின்நீதி குரலாக, சாட்சியாகஇருந்த மிகப்பெரும் ஆளுமையைநாம் இன்று இழந்துநிற்கின்றோம்.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்கதினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021) தமிழ்தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.

இதற்கு தமிழ்தேசிய கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புகொடிகளை பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதே நாளில்தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ்மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்
வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு
முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு
வெண்மயில் அமைப்பு மட்டக்களப்பு
அமெரிக்கன் மிஷன் மட்டக்களப்பு
சடோ லங்கா நிறுவனம் மட்டக்களப்பு
அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம்
தமிழர் நலன் காப்பகம் மட்டக்களப்பு
சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மட்டக்களப்பு
புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு திருகோணமலை
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு
உலக தமிழர் மாணவர் ஒன்றியம்
இராவண சேனை திருகோணமலை
வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment