ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடை போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை தவறு என்றால் மன்னிப்புக்கோர தயார் – விமல்

Date:

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் இடம்பெற்ற பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பாக, மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீர்கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி இடம்பெற்ற பேரணிக்கு தன தலைமை தங்கியதாக குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் இதனை கூயதாகவும் மாறாக மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்திலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக பேசவில்லை என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தாலிபான் அரசின் புதிய கட்டுப்பாடு! அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு, நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்...

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்