தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம்

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் அதனை ஏற்க முடியாது என்றும் 1000 ரூபாய் சம்பளம் சட்டமாக்கப்பட்டால் 13 நாட்களே தொழில் வழங்கப்படும் என்பதோடு, கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பாக கலந்துகொண்டிருந்த ரொசான் ராஜதுரை எச்சரித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் ரமேஸ் பத்திரன, “பெருந்தோட்டத்துறை நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரமுடியாத சூழ்நிலையிலேயே, சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அதனை நிறுவனங்கள் முறையாக அமுலாக்க வேண்டும்.

பெருந்தொட்டத்துறைகளில் பயன்படுத்தப்படாதிருக்கின்ற காணிகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அவ்வாறான காணிகளை அடையாளம் கண்டு சரியான முகாமைத்துவ நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.0Shares

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்