எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ரகளை: 4 பேர் கைது!

Date:

மீகஹதென்ன, பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் போதையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

37, 38 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் பஹலஹெவெஸ்ஸ மற்றும் பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நிக்கவெரட்டிய, மாகல்லேகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொழிலாளி ஒருவரை அச்சுறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நிக்கவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்