பொருளாதார நெருக்கடி எதிரொலி: இலங்கையர்களின் மதுபாவனை குறைந்தது; கள்ளச்சாரயம் கொடிகட்டி பறக்கிறது!

Date:

இலங்கையில் மதுபானத்தின் தேவை சுமார் 30% குறைந்துள்ளதாக பொது நிதி தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டு மக்களின் வருமானம் குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு, இலங்கை கலால் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் உட்பட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது நிதி அதிகாரிகள் குழுவின் கூட்டத்தின் போது, ​​அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை பற்றி விவாதிக்கும் இணையவழி கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை கலால் திணைக்களத்தில் மதுபான உற்பத்திக்கான குறைந்த அளவு எத்தனோல், மட்டுப்படுத்தப்பட்ட டீசல் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இலக்கு வருவாயை அடைவதில் பல சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மதுவின் தேவை சுமார் 30% குறைந்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, இந்த திடீர் விலையேற்றத்தினால் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்