தென்னாப்பிரிக்காவின் நான்காவது பிரிவு கால்ப்பந்து அணியொன்று, ஆட்ட நிர்ணய சதியாக 41 சேம் சைட் கோல்களை அடித்தது. அந்த அணி வாழ்நாள் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்தியாசி அணி கடந்த மாதம் Nsami மைட்டி பேர்ட்ஸுக்கு எதிராக 59-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மைட்டி பேர்ட்ஸ் நான்கு வீரர்களிற்கு சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன.
போட்டி அணியொன்று சம்பியன் பட்டத்தை வெல்வதை தடுப்பதற்காக இரண்டு அணிகளும் இணைந்து ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த தொடரில் டேஞ்சரஸ் டைகர்ஸ் அணிக்கும், மத்தியாசி அணிக்குமிடையில் 22 கோல் வித்தியாசம் காணப்பட்டது.
அதிக கோல் பெற்ற அணியாக மாற, மைட்டி பேர்ட்ஸ் அணியுடன் சதியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இதனால் ஆட்டம் தொடங்கிய பின்னர், மைட்டி பேர்ட்ஸ் வீரர்கள் 41 சேம் சைட் கோல்கள் அடித்தனர். 5ஆம் இலக்க வீரர் 10 கோல்களும், 10 இலக்க வீரர் 20 கோல்களும் அடித்துள்ளனர்.
ஆட்டத்தில் தவறிழைத்து 4 வீரர்கள் சிவப்பு அட்டை பெற்றனர்.
இந்த செயற்பாடு விளையாட்டின் மீதான ரசிகர்களின் அபிமானத்தை கெடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சித்துள்ள தென்னாபிரிக்க கால்பந்து சம்மேளனம், மைட்டி ஸ்போர்ட்ஸ் அணிக்கு வாழ்நாள் தடைவிதித்துள்ளனர்.




