இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு 74 ஆண்டு கால ஆட்சி காரணமல்ல; ஒரேயொருவர்தான் காரணம்!

Date:

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு 74 வருட கால ஆட்சி காரணவில்லை என்றும், 2019 ஆம் ஆண்டு ஊடகங்கள் ஊடாக உயர்த்தப்பட்ட ஒரு நபருக்கு பொதுமக்கள் வாக்களித்ததன் காரணமாக உருவாக்கப்பட்டது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைவாக இருந்ததாக ஃபேஸ்புக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு பாணின் விலை ரூபா 50 ஆகவும், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1350 ரூபாவாகவும், சீமெந்துப் பொதி ஒன்றின் விலை 850 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசல் ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரு கிலோ அரிசி ரூ.100க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது என்றார்.

குறைந்த பட்ச பஸ் கட்டணம் ரூபா 12 என சுட்டிக்காட்டினார்.

எனவே இது 74 வருட கால பிரச்சினையல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...

விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை...

ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்