24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இந்த ஆண்டு அதிகளவான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள்: உலக வங்கி எச்சரிக்கை!

இந்த ஆண்டு அதிகளவான இலங்கையர்கள் வறுமையில் வாடுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதிக அளவிலான கடனை நிவர்த்தி செய்வதற்கும், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் அவசர கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையில் சுமார் 11.7 வீதமான மக்கள் நாளொன்றுக்கு 3.20 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிப்பதாக உலக வங்கி தெற்காசிய பிராந்தியத்தின் வசந்த காலப் புதுப்பிப்பில் கூறியுள்ளது. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான சர்வதேச வறுமைக் கோடு, 2019 இல் 9.2 சதவீதமாக இருந்தது.

உலக வங்கியின் கூற்றுப்படி, நாட்டில் வறுமை விகிதங்கள் அதிகரிப்பதற்கு மற்றைய காரணம், சுமார் 1.2 மில்லியன் ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சமுர்த்தித் திட்டம் போதுமானதாக இல்லாததே ஆகும்.

ஏழைகளில் பாதிக்கும் குறைவானவர்களே சமுர்த்தியின் பயனாளிகள் என்றும், உதவித் தொகைகள் பெரும்பாலும் போதுமானதாக இல்லை என்றும் அது கூறியது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் 2020 இல் 3.6 சதவீதத்தால் சுருங்கியது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment