தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

Date:

விசேட தேடுதல் நடவடிக்கையில் கடற்படையும் பொலிஸாரும் ஈடுபட்டதன் விளைவாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவரை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர் கந்தளாய், மீனவகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பதும் உறுதியாகியுள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், குறித்த நபர் மற்றும் மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்