ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது இராணுவ நீதிமன்றம்!

Date:

மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் குறிப்பிட்டு, அந்த நாட்டு இராணுவ நீதிமன்றத்தினால் புதன்கிழமை (27) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சதிப்புரட்சி நடந்த இரவு முதல் சூகி இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

76 வயதான நோபல் பரிசு பெற்ற இவர், பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

சமீபத்திய வழக்கில், அவர் 600,000 டொலர்கள் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிமன்றம் கூடிய சில நிமிடங்களில் நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சூகி 11.4 கிலோ தங்கம் மற்றும் ரொக்கக் கொடுப்பனவுகளை அவருக்கு எதிரான சாட்சியாக மாறிய, முன்னாள் யாங்கூன் முதலமைச்சர் ஃபியோ மின் தெய்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்ட வழக்கிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு...

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை – றிஷாட்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன்...

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்