24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பியர் போத்தல்களுடன் கவிழ்ந்த லொறி: யாழ் இளைஞன் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57/2 மைல் கல்லிற்கு அருகில் இன்று (12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெற்று பியர் போத்தல்களுடன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானது. சாரதியே உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த லொறி உதவியாளரின் சடலம் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறி கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் சாரதி மற்றும் உதவியாளரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment