உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஒழுங்கு விதிகள் சட்டமூலத்துடன் தொடர்புடைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏன் இன்னும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சட்டமூலத்தைச் சுற்றி பல்வேறு உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் அது பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் எனவும், தேவையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




