ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள லங்கா உப்பு நிறுவனம், நாளை (6) முதல் உப்பின் விலையை 60 ரூபா அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன் படி, 400 கிராம் பொதியிடப்பட்ட உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், 1 கிலோ பொதியிடப்பட்ட உப்பு கட்டியின் விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது. இந்த தகவலை ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக இன்று அறிவித்தார்.
உப்பு விலை அதிகரிப்பு தற்காலிக தீர்மானமாகக் கருதப்படுவதாக அவர் கூறியுள்ளார். மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டையில் உப்பள உற்பத்தி ஆரம்பமாகிய பிறகு, உப்பு விலை மீண்டும் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்ததன் காரணமாக உப்பின் விற்பனை விலை அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.




