இலங்கை பொருளாதார நெருக்கடி எதிரொலி: அகதிகள் வரத்து அதிகரிக்கலாமென இந்திய கரையோரங்களில் பாதுகாப்பு!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து தமிழகம், கேரளாவிலுள்ள கரையோர பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு அகதிகள் படையெடுக்கலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தை போன்று, தற்போதைய காலத்திலும் பெருமளவான அகதிகள் தமிழகத்தை நோக்கி வரலாமென இந்தியா கருதுவதாக அறிய முடிகிறது.

இதனால் இலங்கை ‘பொருளாதார அகதிகள்’ பற்றிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய ‘பொருளாதார அகதிகளை’ கையாள தமிழக காவல்த்துறை விசேட பொறிமுறையொன்றை உருவாக்கியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவர்கள் என்னவிதத்தில் கையாளப்படுவார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 675 ஆக உயர்வு

இந்த வாரம் சீனாவுடனான எல்லைக்கு அருகே ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நேபாளத்தில்...

யுவதியை கடத்திச் சென்ற கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி முழுமையான ஆதரவு! – மு. சந்திரகுமார்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்