91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது.

நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 15 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 2,834 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 324 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 87,630 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 435 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்