91,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

Date:

இலங்கையின் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 91,000 ஐ கடந்தது.

நேற்று 253 கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 91,018 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 15 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது, 2,834 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 324 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 87,630 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 435 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்