உக்ரைன் மீது பெலாரஷ் படையெடுக்குமா?: சாத்தியங்களும், விளைவுகளும்!

Date:

உக்ரைன் போரில் ரஷ்யாவுடன், பெலாரஷ் இணைந்து கொள்ளுமென அமெரிக்க உளவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் படையெடுப்பு  தொடங்கி நான்கு நாட்களாகியும், கடுமையான யுத்தம் நடத்தியும் உக்ரைனை விரைவாக தோற்கடிக்க முடியாத நிலையில், இந்த புதிய மாற்றம் நிகழும் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு, முதல் Ilyushin Il-76 போக்குவரத்து விமானம் உக்ரைனுக்கு எதிராக பெலாரஷ்ய பரா துருப்புக்களை  ஏற்றிக்கொண்டு புறப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரின் நான்காவது நாளான பிப்ரவரி 27 அன்று, பெயரிடப்படாத பெலாரஷ்ய எதிர்க்கட்சி ஊடகவியலாளர்களால் இராஜதந்திர வட்டாரங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, போரில் உத்தியோகபூர்வ பெலாரஷ்ய ஈடுபாடு பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இந்த நிலையில், அமெரிக்க உளவு எச்சரிக்கையில், ரஷ்ய படையெடுப்புப் படைக்கு உதவியாக பெலாரஷ்ய துருப்புக்கள் கீவ் அல்லது சைட்டோமிர் பகுதிகளுக்கு அனுப்பப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெலாரஷ்ய இராணுவ நடவடிக்கையின் அறிகுறிகள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

பெலாரஷ்ய தலையீட்டை எதிர்த்து, பெலாரஷ்ய எதிர்க்கட்சி ஊடகங்களால் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்மட்ட பெலாரஷ்ய விமானப்படை தளபதி வலேரி சகாஷிக், ஒரு வீடியோ உரையில், ஒரு நட்பு தேசத்திற்கு எதிரான போரில் அவர்களைத் தள்ளும் சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று இராணுவத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

பல ஆயிரம் பெலாரஸ் குடிமக்கள் பெப்ரவரி 27 அன்று நாடு முழுவதும் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவிர, உக்ரைனின் ஜனாதிபதி ஆலோசகர் Oleksiy Arestovych பிப்ரவரி 27 அன்று கூறியது போல், பெலாரஷ்ய இராணுவம் விழிப்புடன் இருப்பதற்கான பல அறிகுறிகள் தெரிவிக்கின்றன.

பெலாரஷ்ய ஆயுதப் படைகளில் ஏறக்குறைய 45,000 இராணுவ வீரர்கள் மற்றும் 20,000 சிவிலியன் ஊழியர்கள் உள்ளனர் என்பது பெலாரஷ்ய ஊடகங்களில் இருந்து அறியப்படுகிறது.

Oleksiy Arestovych கருத்துப்படி, வெறும் 17,000 பெலாரஷ்ய இராணுவ வீரர்களே கணிசமான போர்த் திறன் கொண்டவர்கள்.

எனவே உக்ரைன் மீது படையெடுப்பதற்காக குறைந்தது 150,000 துருப்புக்களைக் குவித்த ரஷ்யாவிற்கு அவர்களின் ஈடுபாடு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.

பெலாரசியர்கள் உக்ரைனில் வன்முறையை எதிர்கொள்ளத் தொடங்கினர் என்றும், உக்ரைன் பெலாரஸை பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்துவதாகவும் பெலாரஷ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறினார்.இது ரஷ்ய தாக்குதலை நியாயப்படுத்துவதாக அமைந்தது.

பெலாரஷ் வழியாக ரஷ்யப்படைகள் புகுந்து தாக்குதல் நடத்தின.

இந்த பதற்றங்களிற்கு மத்தியில் பெப்ரவரி 27 அன்று லுகாஷென்கோவுடன், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார். இதன்போது, ரஷ்யாவின் போரில் ஈடுபடவில்லை என்று லுகாஷென்கோ உறுதியளித்தார்.

இருப்பினும், முன்னாள் உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஜாகோரோட்னியூக் தெரிவித்த கருத்தில், உண்மையில், பெலாரஷ்ய ஜனாதிபதியின் இருப்பு புடினை அதிகம் சார்ந்துள்ளது, இதனால் ரஷ்யாவுடன் போரில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

நிபுணரின் கண்ணோட்டத்தில், பெலாரஸின் ஈடுபாடு போரில் வியத்தகு அதிகரிப்பு விளைவைக் கொண்டிருக்காது.ரஷ்யாவும், பெலாரஷின் படை உதவியை பெற விரும்பாது. எனினும், அரசியல் காரணங்களிற்காக பெலாரஷ் போரிடுவதை விரும்பலாம்.

குறிப்பாக, ரஷ்யா தற்போது கவனம் செலுத்தாத உக்ரைனின் வடமேற்குப் பகுதிகளை நோக்கி பெலாரஷ் படையெடுக்கலாம்.

“ஆனால் பெலாரஷ்ய இராணுவத்திற்கு போர் அனுபவம் இல்லை. இது உண்மையில் முக்கியமானது. அவர்கள் உந்துதல் பெறவில்லை, உக்ரைனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கு உண்மையில் புரியவில்லை. உக்ரேனிய படையெடுப்பில் சேராமல் பெலாரஷ்ய வீரர்களை எச்சரிக்கும் ஊடகப் பிரச்சாரம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, அது தொடர வேண்டும் என்று ஜாகோரோட்னியுக் கூறினார்.

“லுகாஷென்கோ படையெடுக்கும் உத்தரவு பிறப்பித்தால், பலர் உக்ரேனியர்களை சுட மறுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார். இல்லையெனில், இது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வரலாற்று சோகமாக இருக்கும் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்