இன்று முதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம்!

Date:

இன்று முதல் மேலும் பட்டதாரிகள் 10,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 60ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நல்லாட்சியில் நியமனம் வழங்கப்பட்ட 14ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேரை நிரந்தர சேவையில் இணைக்க இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா தொற்றினால் அவர்களை அரச சேவைக்கு இணைக்கும் பணி தாமதமானது.

அவர்களின் ஆவணங்களை பெற்று நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.மாவட்ட செயலாளர் அலுவலக மட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்படும்.இவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்