அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை!

Date:

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது தமது கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

35 அரசாங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், டயான கமகே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று (07) பிற்பகல் சபாநாயகரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில், எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தை பாரம்பரியமாக ஆரம்பிக்க வேண்டும் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்ததால், அது தவறவிட்டதாகவும், இதனால் அந்தந்த அமைச்சகங்களின் செலவுத் தலைப்புகளில் எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் உடனடி கவனம் செலுத்தி தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்