இப்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது!

Date:

புதிய தேர்தல் சட்டம் அமுல்படுத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் மறுசீரமைப்புக்கான தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம் என்று நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளோம், ஆனால் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை,” என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

“மாகாண சபைத் தேர்தல் கட்டளைச் சட்டம் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மாகாண சபைத் தேர்தலை அவசரமாக நடத்த முடியாது” என்றார்.

மாகாண சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை குழப்பியது உங்கள் அரசாங்கமே என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” – நடிகை சிம்ரன் பகிர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை...

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்