உயர்பதவிகளிற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்ததால் கிடைத்த நன்மையை அரசு பகிரங்கமாக சொல்ல வேண்டும்!

Date:

அரச துறையின் உயர் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின் பலன் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.பி.மன்னப்பெரும, அரச துறையில் உள்ளவர்கள் பரீட்சைகளில் சித்தியடைந்து அயராது உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், உயர் பதவிகள் அரசியல் கட்சியினராலும், இராணுவத்தினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் செயலாளராக அல்லது நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவராக இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக நாட்டுக்கு நன்மை ஏற்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசி ஆலைகள் மற்றும் சீனி சேமிப்புக் கிடங்குகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடத்தியதாக ஊடகக் காட்சி ஒன்று அரங்கேற்றப்பட்டது.

இறுதியில், அரசாங்கம் அந்தப் பங்குகளை சதொச விற்பனை நிலையங்களுக்கு கொண்டு சென்று நுகர்வோருக்கு விற்று, வர்த்தகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை செலுத்தியது.

எனவே அரச அமைப்புகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் மூலம் மக்களுக்கோ அல்லது நாட்டுக்கோ என்ன நன்மைகள் கிடைத்தன என்பதை வெளிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மான்னப்பெரும அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கண்ணிவெடி வைத்தால் ஈரான் படகுகளை சுட்டுத்தள்ளுவோம்: ட்ரம்ப்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்கா அழிக்கும் என்று...

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்தவருக்கு விளக்கமறியல்

அண்டை வீட்டுப் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இரகசியமாக காணொளிப் பதிவு...

‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் கூறினாரா? – மேலாளர் மறுப்பு

வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்