மானிப்பாய் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடமையிலிருந்த பொலிசாரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (13) இரவு மானிப்பாய் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்தனர். எனினும், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல், பொலிசாரை மோதினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கால் முறிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



