23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் நில அளவைக்கு தென்கொரிய நிறுவனம்!

கொரியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊடாக இரகசியமாக நாட்டில் நில அளவீட்டு திட்டத்தை தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரச அளவையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சங்கத்தின் தலைவர் துமிந்த பண்டார, மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், முன்னாள் அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் செயல்படுத்த முயன்றது, திட்டத்தின் நோக்கம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று கூறினார்.

இது தொடர்பான ஆவணம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டதாக பண்டார கூறினார்.

தொடர்புடைய நடவடிக்கைகள் இரகசியமாக எடுக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிட்டார்.

காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறினார்.

இது நில அளவீட்டுத் திட்டம் அல்ல, தென் கொரியாவின் உதவியுடன் இலங்கை அளவிடும் கருவிகளைப் பெற உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக மனு தாக்கல்

east tamil

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கயிருந்த 2வது வெளிநாட்டு பெண்ணும் மரணம்!

Pagetamil

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

Leave a Comment