இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ராலை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதன்படி, மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக கப்ரால் நாளை பொறுப்பேற்கிறார்.
அஜித் நிவார்ட் கப்ரால், ஒரு பட்டய கணக்காளர் ஆவார். முன்பு ஒரு அமைச்சு செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராகவும் 2006 மற்றும் 2015 க்கு இடையில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் டபிள்யூடி லக்ஷ்மன் இன்று முதல் ஓய்வு பெற உள்ளார்.




