வடக்கில் மேலுமொரு முக்கிய பதவிக்கு சிங்கள மொழி பேசுபவர் நியமனம்!

Date:

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்) பதவி வெற்றிடமாக இருந்தது.

எனினும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு உள்ளநிலையில் திருகோணமலையில் கடமையாற்றிய சிங்கள மொழி பேசுபவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை கடந்தவாரம் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் பொதுஜன பெரமுன தொழிற்சங்கத்தின் தலையீட்டுடன் நிகழ்ந்ததாக, வடமாகாண இ.போ.ச தொழிற்சங்கங்கள் பல குற்றம்சாட்டியுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்